பெண்ணிற்கு மட்டுமா தாய்மை


அங்கும் இங்கும் ஹாஸ்பிட்டலின் அந்த அறையின் முன் குறுக்கே நடந்தபடி இருந்தான் கதிர் அவனுடைய முகத்தில் அவ்வளவு வேதனை, பெண்ணாயிருந்தால் கதறி அழுது விடலாம்.ஆணிற்கு அதற்கும் இந்த சமூகம் தடை விதித்து விட்டது.அதையும் மீறி அவன் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.அவன் ஆருயிர் மனைவி சீதா பிரசவ அறையினுள்ளே படும் வேதனை வாரிசு வரும் மகிழ்வை விட அதனை விட மனைவியின் வலியை எண்ணியது. இவனுள்ளம் இங்கே இல்லை. பிரசவ அறையினுள் இவன் செல்ல அனுமதி கேட்டான் அவளுடனாவது அருகில் இருக்கலாமென்ற ஏக்கம். நர்ஸ் நம்ம நாட்ல வெளிநாடு மாதிரி அப்படி எல்லாம் விட சட்டம் இல்லை என்று சொல்லி உள்ளே சென்றாள்.அதானே உள்ள விட்டா பெண்களின் மறுபிறப்பை கண்ணால் கண்ட எந்த ஆணும் பெண்களை தாயா மதிப்பான் அதுக்கு சட்டமே இல்லையாம் என் மனைவியை பார்க்க எனக்கே அனுமதி இல்லை என கண்ணீருடன் அந்த அறையின் வாயிலையே நோக்கிய படி நின்றான் பழைய நினைவுகளுடன். கதிர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவன்.ஓராண்டு முன்பு அம்மாவின் கல்யாண நச்சரிப்பு தாங்காமல் திருமணத்திற்கு பெண் பார்க்கலாமென தலையாட்டினான்.பெண் பார்க்கும் படலத்தில் சீதாவிற்கும் கதிருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்க பட்டு திருமணம் இனிதே நடந்தேரியது.இருவரின் மனமும் ஒரே மாதிரியான எண்ணங்களே இதில் பாசத்திற்கென்ன பஞ்சமா, காதலுக்கு குறையா.கதிர் சீதாவின் மீது உயிர் கொண்ட காதலை காட்டினான் சீதாவோ தன் உயிரே கதிர் என எண்ணினாள்.இரண்டு நாட்களாய் சீதாவிற்கு பயங்கர சோர்வு அதை கவனித்த கதிர் சீதா ஏன் இவ்வளவு டயர்டா இருக்க டாக்டர் கிட்ட போலாமா என அலுவகத்திலிருந்து வந்ததும் கேட்டான்.இல்லங்க போன வாரம் பங்சன் அது இதுனு வெளிள சாப்டது ஒத்துக்கல போல இரண்டு நாள்ல சரி ஆகிடும் என்றாள். ஓ சரி சரி நீ நல்லா ரெஸ்ட் எடு இன்னிக்கு தோசை தான நானே ரெண்டு பேருக்கும் டின்னர் ரெடி பண்றேன்.அய்யோ வேண்டாங்க நீங்கலே ஆபிஸ்ல இருந்து டயர்டா வந்துருக்கீங்க நீங்க ஏன் சிரம படறீங்க நானே செய்யரேன் என படுக்கையிலிருந்து எழுந்தாள்.எழ போனனவளை தடுத்து என் செல்லக்குட்டி சமத்தா ரெஸ்ட் எடு நா ஐஞ்சு நிமிசத்தில தோசை சுட்டு உன்க்கும் ஊட்டி விடறேன் ஓகே வா என நெற்றியில் இதழ் பதித்தான் அதே போல ஊட்டியும் விட்டான் கதிர். அவளுக்கோ கண்ணில் கண்ணீர் சீதா சட்னி காரமா இந்தா தண்ணீ குடி டம்ளரை நீட்டீனான்.இல்லங்க எங்க அம்மாவும் எனக்கு ஒடம்புக்கு முடியலனா இப்புடி தா பார்த்துபாங்க அதான் என்றாள்.நா வேனா மாமாக்கு போன் பண்ணி வர சொல்லட்டுமா என்றான் கதிர்.வேண்டாங்க அவங்க என்னமோ ஏதோனு பயந்துப்பாங்க எனக்கு வெறும் டயர்டு தான் தூங்கி எந்துருச்சா சரி ஆகிடும் நம்மதா அடுத்த வாரம் திருவிழாக்கு போறமே அவங்கள எதுக்கு சிரமபடுத்தனும்.ம் சரி நீ தூங்கு நான் ஆபிஸ் ஒர்க் கொஞ்சம் இருக்கு அத முடுச்சிட்டு மேனேஜர்க்கு மெயில் பண்ணிட்டு வரேன் என்றான்.ம் சரிங்க ரெம்ப நேரம் முழுச்சுருக்காம சீக்கிரம் வந்து படுங்க என்றாள் சீதா.மகாராணியின் உத்தரவுக்குக்கு அடியேன் அடிமை என நடித்தான் கதிர்.போங்க என சினுங்கியவளை இப்புடி எல்லாம் ரியாக்சன் குடுத்தா நான் வேலை செய்ய போக மாட்டேன் என போலியாக சுட்டு விரல் காட்டி கண்ணடித்து எச்சரித்தான்.அய்யோ சாமி ஆள விடுங்க நான் தூங்கிட்டேன் நீங்க போயி உங்க வேலய பாருங்க என்றாள் சீதா.அவளை ரசித்தபடியே அவன் வேலையை முடித்தான் சீதா நன்றாக தூங்கி விட்டாள் அவளின் உறக்கம் கெடாமல் முத்தமிட்டு கட்டியணைத்தபடி கதிரும் உறங்கி விட்டான்.காலை சீதா எழுந்ததும் மணியை பார்த்தாள் மணி 7.00 அவருக்கு ஆபிஸ்க்கு லேட் ஆகிடுச்சே என இவ்வளவு நேரம் தூங்கி விட்டோமே என தன்னை கடிந்த படி அவசரமாய் எழுந்தாள் அப்படியே தலை சுற்ற என்னங்க என சத்தமிட்டபடி கீழே விழுந்தாள்.சத்தம் கேட்டு விழித்த கதிர் விழுந்து கிடந்த சீதாவை கண்டு அதிர்ந்தான்.தன் காரின் சாவியை எடுத்து கொண்டு அவளை தூக்கி அருகிலுள்ள நர்சிஸ் ஹோமிற்கு விரைந்தான். டாக்டர் ரேகா சீதாவை பரிசோதித்து விட்டு கதிரை உள்ளே அழைத்தார் டாக்டர் சீதாவிக்கு என்ன ஆச்சு என்றான்.பயப்படாதீங்க சார் எல்லாம் நல்ல விசயம் தான் உங்க வொய்ப் பிரக்னன்ட் ஆ இருக்காங்க அந்த தலைசுற்றல் தான் வேற ஒன்னும் இல்ல கங்ராட்ஸ் என்றார்.தேங்க்யூ டாக்டர் தேங்க்யூ சோமச் என்றான்.யு ஆர் வெல்கம் இன்னும் டூ த்ரீ மன்த்ஸ் இப்டி தான் இருக்கும் நா டேப்லட்ஸ் எழுதி தரேன் கரெட்டா சாப்டனும் நீங்க இனி நெக்ஸ்ட் மன்த் வந்தா போதும் ஸ்கேன் எல்லாம் அடுத்த டைம் வரப்ப டேட் சொல்ரேன் அப்போ வாங்க என்றார் இவன் சரியென தலையாட்டி விட்டு சீதாவை பார்க்க சென்றான்.அவளோ இவனை பார்த்ததும் வெட்கத்தில் அவன் மார்பில் முகம் புதைத்தாள்.ஏன்டீ பொண்டாட்டி எங்கிட்ட முன்னாடியே சொல்லல என அவளிடம் செல்லமாய் போபித்து கொண்டாண்.இல்லங்க போன வாரம் வெளில போனதுல வந்த டய்ர்டுனு நினைச்சுட்டேன் நாள் தள்ளி போனத மறந்துட்டேன்.அடிப்பாவி இப்பவே என் குட்டி செல்லத்த மறந்துட்டியா இரு இரு அவனை விட்டு உன்ன உதைக்க சொல்றேன் என்றான் கதிர்.அதுக்கு இன்னும் ஆறேழு மாசம் நீங்க வெயிட் பண்ணனும் என்றாள் சீதா அவ்ளோ நாள் ஆகுமா சீதா,இல்லைங்க கதிரோட குட்டிங்கரதால ஐஞ்சு நாள்ல வந்துடுவான் ஆசைய பாரு பத்து மாதம் வெயிட் பண்ணனும் என்றாள் சீதா.அவ்ளோ நாள என பெருமூச்சு விட்டான்.அதற்குள் வீடு வந்துவிட கதிரின் குடும்பத்திற்கும் சீதாவின் குடும்பத்திற்கும் போன் செய்து இனிய தகவலை பரிமாறினர். அடுத்த நாளே இரு குடும்பமும் சீதாவை பார்க்க வந்து விட்டனர்.அந்த இரண்டு நாட்களும் கதிர் அலுவலகத்திற்கு லீவ் சொல்லிவிட்டான்.அன்றே சீதாவின் அம்மா கதிரிடம் சீதாவ நாங்க ஊருக்கு கூட்டிட்டு போகட்டுமா மாப்ள இங்கிருந்தா நீங்களும் ஆபிஸ் போயிட்டா ஏதாச்சும் ஒன்னுன்னா அவ கஷ்டப்படுவா என்றார்.அதற்குள் சீதாவே இல்லம்மா நான் இங்கயே இருக்கேன் என்னால முடியலனா அங்க ஊருக்கு வந்துரேன் என மறுத்து விட்டாள்.ஆயிரம் அறிவுரைகளுடன் இரு குடும்பமும் திரும்பி சென்றனர்.அன்றைய தினத்திலிருந்து கதிர் சீதாவை தன் ஆசை மனைவியை உள்ளங்கையில் வைத்து தாங்கினான்.அவனின் காதலாலும் கவனிப்பாலும் தாய்மையின் பூரிப்பாலும் சீதா இன்னும் அழகானாள்.அவ்வ போது இரு வீப்பாரும் வந்து சீதாவை பார்த்து கொண்டனர்.கதிர் தினம் காலை மாலை சீதாவை வாக்கிங் கூட்டி செல்வான் இரவு அவள் மேடிட்ட வயிற்றை தடவிய படி குழந்தையை கொஞ்சுவான்.ஆறுமாதம் முடிந்ததும் ஏழாம் மாதம் வளைகாப்பு நடத்தினர் சீதாவை தாயின் வீட்டிற்கு கூட்டி சென்றதும் அவனோ இரண்டு நாட்களில் திரும்ப சென்று சீதாவின் தாயிடம் இங்கு மருத்துவம் போக்கு வரத்து வசதிகள் இல்லை அது இது என கூறி திரும்ப அழைத்து வந்து விட்டான்.அவர்களுக்கு ஒவ்வொரு நாட்களும் காதலுடனை கடந்தன. பாப்பா பொறந்தா என்ன பேர் வைக்கலாம் தம்பி பொறந்தா என்ன பெயர் வைக்கலாம் என பேசிக் கொண்டிருந்த சமயம் முதன் முறையாய் வயிற்றினுளிருந்து உதைத்தது குழந்தை.என்னங்க இங்க பாருங்க உதைக்கிறான் அய்யா ஜாலி உதைக்கறான் சீதா என் சிங்ககுட்டி என வயிற்றை தடவினான்.என்ன உதைக்கறது உங்களுக்கு ஜாலியா என அவன் காதை திருகினாள்.அய்யோ சும்மா சொன்னேன்டி ராட்ஷசி, காதை தடவியபடி சொன்னான் அந்த பயம் இருக்கட்டும் என்றாள் சீதா. இருவருக்குள்ளும் குழந்தையை பற்றிய ஆயிரம் கனவுகள். நாட்கள் நகர எட்டாம் மாத முடிந்தது அன்று ஹாஸ்பிட்டல் ஸ்கேன் டாக்டர் செக்கப் எல்லாம் முடித்து விட்டு வீடு திரும்பனர்.சீதா சரியாய் அன்று சாப்பிடவே இல்லை ஏன் சீதா இன்னைக்கு நீ சரியா சாப்படல டாக்டர் எல்லாம் நார்மலா இருக்கு நோ பிராப்ளம்னு தான சொன்னாங்க அப்புறம் என்னாச்சு என்றான் கதிர்.இல்லங்க பிரசவம் ஒவ்வொரு பொண்ணுக்கும் மறுபிறவினு சொல்லுவாங்க நா மறுபடி பிறக்கலனா என கூறும் போதே அவள் வாயை தன் கைகளால் மூடினான் லூசாடி நீ நான் இருக்கும் வரைக்கும் உனக்கு ஒன்னும் ஆகாது ஆகவும் விடமாட்டேன் என்றான்.அடுத்த நாளே அவள் தாயை வர வழைத்தான் கதிர்.அவன் ஆபிஸ் செல்லும் நேரம் மட்டும் கதிரின் தாயும் சீதாவின் தாய் என மாறி மாறி பார்த்துக் கொண்டணர்.அவனிருக்கும் நேரங்களில் கதிர் தான் சீதாவிற்கு சகலமும் செய்வான்.அன்றும் அப்படித்தான் ஆபிஸிற்கு சென்று தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்த நேரம் வீட்டிலிந்து போன் வந்ததும் அட்டெண்ட் செய்து காதில் வைத்த மறுநொடி மாப்ள சீதாவுக்கு வலி வந்துடுச்சு சீக்கிரம் வாங்க என்றாள் சீதாவின் தாய் அதே சமயம் சீதாவின் அலறல் கேட்டது அடுத்த நொடி மேனேஜரிடம் சொல்லிவிட்டு காரை எடுத்துக் கொண்டு விரைந்தான்.வீட்டிற்கு வந்தது சீதாவை தூக்கிக் கொண்டு போனது எல்லாம் இயந்திரம் போல இருந்தான்.அவன் காதல் மனைவி படும்பாட்டை பார்த்து அவனும் கதறி அழுதான்.அப்பொழுது தான் பழைய நினைவிலருந்து மீண்டு ஹாஸ்பிட்டலில் இருக்கிறோம் என உணர்ந்தான்.அந்த நொடி அறையினில் இருந்து டாக்டர் ரேகா வெளி வந்தார்.உங்களுக்கு ஆண் குழந்தை மிஸ்டர் கதிர் தாய் சேய் இருவரும் நலம் சீதா இப்போ மயக்கத்துல இருக்காங்க மயக்கம் தெளிஞ்சதும் அவங்கள டிஸ்டர்ப் பண்ணாம போயி பாருங்க என்றார்.ஆனந்த கண்ணீரால் நன்றி கூறி விட்டு உள்ளே சென்றதும் குழந்தையை கூட பார்க்காமல் சீதாவாடம் சென்று தன் கையால் சீதாவின் தலை கோதி விட்டான்.குழந்தை சினுங்கவே குழந்தையிடம் செனறான் தொட்டிலில் குழந்தையை பார்த்ததும் இனம் புரியாய பரவசம் பனியின் மீதுள்ள சிகப்பு ரோஜா போல உறங்கிக் கொண்டிருந்தான் குழந்தை.சீதா கண் முழித்ததும் அவளால் அசதியில் பேச முடியாததால் அவளருகில் வந்தான் சீதா என அவள் கரம் பிடித்து இதழ் பதித்தான்.குட்டி யையன் என்ன சொல்றான் என்றவாறே அனைவரும் உள்ளவற விலகி நின்றான். சீதா எங்களவிட விட மாப்ள தான் ரொம்ப அவஸ்தை பட்டுடாருமா என்றாள் சீதாவின் அம்மா.அப்போது கதிரின் விழிகளும் சீதாவின் விழிகளும் காதலில் ஆயிரம் வார்த்தைகள் பரிமாறி கொண்டன.






சுபம்
எனது முதல் படைப்பு தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.


Comments

  1. அருமையான படைப்பு. உணர்வுகளை தூண்டும் கதை. வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  2. The Best Casinos in India (2021) | Expert Ratings
    There are many slot machine bonuses out 22bet there, but none of them bet 분석 will match the 해외 안전 놀이터 quality of the casino's offerings. 라이브채팅 You'll find a welcome bonus and 강원 랜드 여자 앵벌이

    ReplyDelete
  3. The Borgata Hotel Casino and Spa | Dr.MCD
    Hotel, restaurant, 삼척 출장샵 casino & poker rooms at Borgata Hotel 동두천 출장샵 Casino and Spa. Experience luxurious 부산광역 출장샵 accommodations, delicious dining, 강원도 출장샵 and exciting 포항 출장안마 casino

    ReplyDelete

Post a Comment